எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட உள்ளேன் ; சற்றுமுன் சஜித் அறிவிப்பு
மன்னாரை போர்ட் சிட்டியாக மாற்றும் ஜனாதிபதியின் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் ; மனுஷ
ரணில் விக்கிரமசிங்க அரசியலில் நீண்டகாலம் இருந்த போதிலும் ஜனாதிபதியாக முதற்தடவையாக பதவியேற்றுள்ளார். இந்த முதற் சந்தர்ப்பத்திலே வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதி என்று பாராமல் சகலருக்கும் சமனாக சேவை செய்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார சுட்டிக் காட்டினார்.
மன்னாரில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரிசி வழங்கும் நிகழ்வு கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றது. அங்கு கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது ஜனாதிபதி பதவி இது என்பதை மறந்து விடாதீர்கள். 2015 ஆம் ஆண்டில் தமிழில் தேசிய கீதத்தை அறிமுகப்படுத்தியது மற்றும் அனைவருக்கும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கான கொள்கைகளை செயல்படுத்துவது போன்ற முயற்சிகளில், தேசத்தை உயர்த்துவதற்கான ஒரு பார்வை அவருக்கு உள்ளது.
"குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அரிசி விநியோகம் நாடு தழுவிய ரீதியில் நடைபெற்று வரும் நிலையில், ஜனாதிபதியின் இலக்கு காலவரையின்றி மானியங்களை நம்பியிருக்கவில்லை. மாறாக, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, குடும்பங்களை மேம்படுத்துவது மற்றும் தன்னிறைவை உருவாக்குவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளார்" என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
மன்னாரின் அபிவிருத்தி தொடர்பில், மன்னாரை துறைமுக நகரமாக மாற்றுவதற்கும், இந்தியாவுடனான படகு சேவையை புத்துயிர் பெறுவதற்கும் ஜனாதிபதியின் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் அதிகமாக மன்னார் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. உள்ளூர்வாசிகளின் வருமானத்தை அதிகரிக்க ராமர் பாலம் போன்ற இடங்கள் பயன்படுத்தப்படுகின்றது.
வட மாகாணத்தின் போருக்குப் பின்னரான போராட்டங்களை அங்கீகரித்த அமைச்சர், முன்னேற்றத்திற்கான அடித்தளக் கூறுகளாக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு முன்னுரிமை அளித்து, நாடு முழுவதும் சமத்துவமான அபிவிருத்திக்கு ஜனாதிபதி அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றார் என தெரிவித்தார்.
2015 முதல் 2022 வரை நாட்டுக்குள் பல்வேறு விதமான சட்டவிரோத முறைகளில் வாகனங்கள் இறக்குமதி செய்து விற்கப்பட்டுள்ளன - அவற்றை பாவிப்பவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்போகிறோம் ; நிதி இராஜாங்க அமைச்சர்
#இலங்கை #VIDEO > உயிரிழந்த தன் தந்தைக்காக கோடிகளை கொட்டி தாஜ்மஹால் மற்றும் ஜெய்ப்பூர் அரண்மனை போன்ற வடிவில் நினைவாலயம் கட்டிய மகன்
யாழில் இறையடி சேர்ந்த தனது தந்தைக்காக மகன் ஒருவர் மிகவும் பிரமாண்டமான ரீதியில் ஒரு நினைவாலயத்தை அமைத்துள்ளார்.
கந்தசாமி பகீரதன் என்பவரே தனது தந்தையான கந்தசாமிக்காக இந்த நினைவாலயத்தை அமைத்து அதற்கு கந்தக்கோட்டம் என பெயர் சூட்டியுள்ளார்.
இந்த நினைவாலயமானது, யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, சுழிபுரம் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த 2011.04.01 அன்று தந்தை உயிரிழந்த நிலையில் அடுத்த வாரமே இந்த நினைவாலயத்திற்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு வருடத்தில் பெரும்பாலான வேலைகள் செய்து முடித்து இருந்தாலும், நிதிப் பிரச்சினை காரணமாக அதனை முற்றுப்பெற வைக்க முடியாத நிலையில் மிகுதி வேலைகள் தற்போது இடம்பெறுகின்றன.
அத்துடன், கடந்த பல வருடங்களாக, இந்த நினைவாலயத்திற்கு அருகாமையில் வசிக்கும் மாணவர்களுக்கு 40% இலவசக் கல்வி வழங்கப்பட்டு வந்தது.
இந்த கட்டடக்கலையானது இந்திய கலைஞர்களால் கட்டப்பட்டது போன்று தோற்றமளித்தாலும் முற்று முழுவதுமாக யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியில் வசிக்கும் தொழிலாளர்களின் கை வண்ணத்திலேயே கட்டப்பட்டுள்ளது.
தாஜ்மஹால், ஜெய்ப்பூர் அரண்மனை மற்றும் ஆலயங்களின் கட்டடக் கலைகளை உள்ளடக்கியே இந்த நினைவாலயம் அமைக்கப்பெற்றுள்ளது.
அண்மைக் காலங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே வன்முறைகள், முரண்பாடுகள் தோற்றம்பெற்று வரும் நிலையில், தந்தைக்காக மகன் கட்டிய இந்த நினைவாலயமானது அடுத்தகட்ட சந்ததியை நல்வழிப்படுத்துவதற்கான முன்னுதாரணமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
கண்டி - வத்தேகம பிரதேச 16 வயது சிறுமியை கொழும்புக்கு வேலைக்கு வரவழைத்து தகாத தொழில் ஈடுபடுத்தியமை - பெண் உட்பட மூவர் கைது
கொழும்பில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பதின்ம வயது சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
தூர பிரதேசங்களிலுள்ள இளம் யுவதிகளை குறி வைத்து இவ்வாறான மோசடி கும்பல் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கண்டி, வத்தேகம பகுதியை சேர்ந்த 16 வயதான பதின்ம வயது யுவதிக்கு சலூனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, கொழும்பில் தகாத தொழில் ஈடுபடுத்தியமை தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தகாத தொழிலை நடத்தும் நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் குறித்த யுவதியை வேலைக்கு அழைத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு நபர்களாலும் யுவதி தகாத வகையில் நடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக்கில் பார்த்த விளம்பரத்தின் அடிப்படையில் கொழும்பில் வேலையை செய்ய குறித்த யுவதி வந்துள்ளார்.
அதன்படி இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு தன்னிடம் சலூனில் வேலை உள்ளதாக கூறியதாகவும் கொழும்பிற்கு வருமாறு அழைத்ததாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் குறித்த சிறுமியை சந்தித்த இந்த நபர், தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
வேலை வாங்கித் தருவதாக யுவதியை ஏமாற்றி இந்த இடத்தில் இணைத்த நபர், மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்ற உரிமையாளர், உரிமையாளரின் இரகசிய காதலி என கூறப்படும் 23 வயதுடைய யுவதி மற்றும் மசாஜ் மையம் இயங்கும் கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் நுகேகொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதாயின், சகல கட்சிகளிடமும் எழுத்து மூல ஆதரவை கோருவது சிறந்த விடயமாக அமையும் என ஜனாதிபதியிடம் பசில் தெரிவிப்பு.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ஹரின் பெர்னாண்டோ, டிரான் அலஸ், பிரசன்ன ரணதுங்க மற்றும் கஞ்சன விஜேசேகர ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் தேர்தல் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்போது கருத்துரைத்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், மே தினத்தை அடுத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவாராயின் அது தொடர்பில் சகல கட்சிகளிடமும் எழுத்து மூல ஆதரவை கோருவது சிறந்த விடயமாக அமையும் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதன்போது கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட தரப்பினரை மீண்டும் உள்வாங்குவதற்கு பிரதமரின் தலையீட்டை தாம் எதிர்பார்ப்பதாகவும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அரசாங்கத்தின் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியிருப்பதனால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான தமது தீர்மானத்தை எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அறிவிக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன